தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

90களில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக பிரபலமானவர் ரவீந்தர். குறிப்பாக ரஜினி, கமல் ஆகியோரின் படங்களில் அதிகம் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற இவர் சமீபகாலமாக மலையாள திரையுலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது மோகன்லால் நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் கேரளாவில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக மலையாள நடிகர் சங்கத்தில் நிர்வாகிகளாக இருந்த பல நடிகர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். இதனைத் தொடர்ந்து அதற்கு தார்மீக பொறுப்பேற்று தலைவர் மோகன்லால் மொத்த நிர்வாக குழுவுடன் சேர்ந்து ராஜினாமா செய்தார். மீண்டும் விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மீண்டும் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த நிலையில் தான் நடிகர் ரவீந்தர் இது குறித்து கூறும்போது, “ மோகன்லால் போன்றவர் தான் இந்த தலைமை பொறுப்புக்கு சரியான நபர். ஆனால் துரதிஷ்டவசமாக வேறு யார் யாரோ செய்யும் தவறுகளுக்கு அவர்தான் பலிகடா ஆகிறார். நடிகர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்யப்படும் அளவிற்கு சூழல் உருவானது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி. மீண்டும் அவர் தலைவர் பதவிக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.