தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் பஹத் பாசில் இன்று மலையாள திரையுலகையும் தாண்டி தென்னிந்திய அளவில் அதிகம் விரும்பப்படும் நடிகராக மாறிவிட்டார். மிகப்பெரிய ரசிகர் வட்டமும் அவருக்கு உருவாகிவிட்டது. அவரை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு தென்னிந்திய அளவில் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் பஹத் பாசில் நடித்த முதல் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட அவருக்கு ஏழெட்டு வருடம் இடைவெளி விழுந்தது. அதன் பிறகு அவர் நடித்த படம் தான் சப்பா குரிசு. இந்தப் படத்தின் வெற்றி பஹத் பாசிலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதை லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்திருந்தார்.
“இதில் நடிக்கும்போது பஹத் பாசில் கடுமையான உழைப்பை கொடுத்தார். அவரிடம் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என கேட்டபோது நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என கூறினார். இல்லை தாராளமாக நீங்கள் ஒரு தொகையை சொல்லுங்கள். எனக்கு பிரச்சனை இல்லை என்று சொன்னதும், நாங்கள் ஒரு போட்டிக்கு தயாராகி வருவதாகவும் அதற்கு கட்டுவதற்கு 65 ஆயிரம் ரூபாய் தேவை என்றும் அவர் கேட்டார். அப்போது நான் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்தேன். இன்று அவரது உயரம் எங்கேயோ போய்விட்டது. இன்று ஐந்து கோடி, பத்து கோடி கொடுத்தாலும் கூட அவரை படங்களில் ஒப்பந்தம் செய்வது மிகப்பெரிய டாஸ்க் ஆகவே இருக்கிறது, இதுதான் சினிமாவின் மேஜிக்” என்று கூறியுள்ளார்.