தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கன்னட திரையுலகில் நடிகர் ராஜ்குமாருக்கு அடுத்ததாக மரியாதைக்குரிய நபராக ரசிகர்களால் மட்டுமல்ல, திரையுலகை சேர்ந்தவர்களாலும் போற்றப்படுபவர் நடிகர் விஷ்ணுவர்தன். தனது 37 வருட சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்த விஷ்ணுவர்தன் கடந்த 2009 ஆம் வருடம் காலமானார். அவர் நினைவாக பெங்களூருவில் உள்ள அபிமன் ஸ்டுடியோவில் அவருக்கு ஒரு நினைவிடம் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வேறுசில கட்டடங்களின் கட்டுமான காரணங்களுக்காக ஒரே இரவில் அந்த நினைவிடம் இடிக்கப்பட்டுள்ளது.
இது விஷ்ணுவர்தன் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரிடமும் கூட அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடிகர் கிச்சா சுதீப் கூறும்போது, “விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிக்கப்பட்டது இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. நான் கிச்சாவாக பேசவில்லை. அவரது ஒரு ரசிகனாக மிகப்பெரிய அளவில் புண்பட்டு இருக்கிறேன். அதேசமயம் விஷ்ணுவர்தன் எப்போதுமே சொல்வதுண்டு, “இறந்தாலும் நான் ஏதோ ஒரு கட்டடத்துக்குள் அடைந்து கிடக்க விரும்ப மாட்டேன். இல்லையென்றால் ஒரு அசையாத பொருளாக இருக்க மாட்டேன். வேறு ஐந்து விதமான வடிவங்களாக நான் உணரப்படுவேன். நாம் இயற்கையை சேர்ந்தவர்கள் என்று அவ்வப்போது கூறுவார்.
ஒரு வகையில் அவரது அந்த விருப்பம் இப்போது நிறைவேற்றப்பட்டிருந்தாலும் கூட சாதாரண ரசிகர்களும் மக்களும் இதை புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒரு கடிதம் அனுப்புவதற்கு தபால் பெட்டி எப்படி தேவையோ அதே போலத்தான் நம் பிரார்த்தனைகளை மரியாதையை செலுத்துவதற்கு ஒரு நினைவிடம் தேவை” என்று கூறியுள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டியும், “விஷ்ணுவர்தன் நினைவிடம் இடிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. அவரது பெர்சனாலிட்டியையும் கலைக்கு அவர் செய்த பணிகளையும் அவமானப்படுத்துவது போல இருக்கிறது” என்று கூறியுள்ளார்.