விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் |
மலையாள திரையுலகில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. மலையாள நடிகர் சங்கத்தை போலவே தயாரிப்பாளர் சங்கத்திற்கும் முதன்முறையாக சான்ட்ரா தாமஸ் என்கிற பெண் தயாரிப்பாளர் ஒருவர் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை தயாரிப்பாளர் சங்க தேர்தல் குழு நிர்வாகிகள் நிராகரித்த நிலையில் அதற்கு நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் மம்முட்டி தன்னை தொடர்பு கொண்டதாகவும் அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு கூறியதாகவும் இதே நிலையில் உங்கள் மகள் இருந்தால் நீங்கள் என்ன முடிவு எடுத்திருப்பீர்கள் என்று நான் பதிலுக்கு கேட்டதற்கு இவர் ஒன்றும் சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார் சான்ட்ரா தாமஸ். இந்த நிலையில் மம்முட்டி தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு ஒரு பெண் போட்டியிட விரும்பவில்லை என்பதால் தான் இப்படி மம்முட்டி சான்ட்ரா தாமஸை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்பது போன்று செய்தி வெளியில் பரவ ஆரம்பித்தது.
இதனை தொடர்ந்து உடனடியாக இது குறித்து விளக்கம் அளித்துள்ள சான்ட்ரா தாமஸ், “மம்முட்டியை பற்றி நான் எதுவும் தவறாக சொல்லவில்லை. தவிர அவரும் என்னை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளவும் சொல்லவில்லை. நான் தொடர்ந்த வழக்கு குறித்து தான் அவர் பேசினார். அதிலும் குறிப்பாக அவரது நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் ஆன்ட்டோ ஜோசப் சார்பாக அவர் பேசும்போது தான் அந்த வழக்கு வேண்டாமே என்பது போல பேசினார். நான் என் பக்கத்தில் உள்ள நியாயத்தை சொன்னதும் ஒரு பெண் என்பதற்காகவே நான் அவர்களால் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். அதன் பிறகு உன் இஷ்டம் என்று அவர் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இவ்வளவுதான் நடந்தது” என்று கூறியுள்ளார்.