தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கர்நாடக அரசு ஆண்டு தோறும் கலை, இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கி வருகிறது. 2025ம் ஆண்டுக்கான கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலை உலகைச் சேர்ந்த நடிகை சரோஜாதேவி, நடிகர் விஷ்ணுவர்தன் ஆகியோருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமய்யா தலைமையில் நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு இதனை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் "திரைத்துறையில் சாதனை புரிந்ததற்காக நடிகர் விஷ்ணுவர்தன், நடிகை சரோஜாதேவி ஆகியோருக்கு கர்நாடகத்தின் மிக உயரிய விருதான கா்நாடக ரத்னா விருது வழங்குவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது" என்றார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த விஷ்ணுவர்தன் கடந்த 2009ம் ஆண்டு காலாமானர். தமிழ் நாட்டில் 'கன்னடத்து பைங்கிளி' என அழைக்கப்பட்ட நடிகை சரோஜாதேவி கடந்த ஜூலை 14ந்தேதி மரணம் அடைந்தார்.