தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இங்கே தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது பற்றி கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக பரபரப்பு ஓடிக் கொண்டிருக்க, அங்கே மலையாளத்திலும் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பிரித்விராஜ் டைரக்ஷனில் மோகன்லால் நடித்த எம்புரான் படம் கூட சென்சாரில் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து தான் வெளியானது. ஆனால் ஹிருதயபூர்வம் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க படத்தின் இயக்குனர் சத்யன் அந்திக்காடு தான் காரணம்.
ஏனென்றால் குடும்பப்பாங்கான படங்களை இயக்குவதற்கு பெயர் போனவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. இவர்கள் இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். 'என்னும் எப்பொழுதும் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரது கூட்டணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. வரும் மார்ச் 28ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.