தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நாடெங்கிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலை விற்பனையும் கடந்த சில நாட்களாகவே களைகட்டி வந்தது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான பிரம்மானந்தம் தன் கையில் விநாயகர் சிலையை வைத்தபடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஆச்சரியமாக இந்த விநாயகர் சிலையை தன் கையாலேயே உருவாக்கியுள்ளார் பிரம்மானந்தம்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் இப்படி விநாயகர் சிலை செய்வதை எப்போது துவங்கினேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு இது ஞாபகத்தில் இருக்கும் வரை இந்த கலையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். என் சொந்த கரங்களால் உருவம் கொடுத்து விநாயகர் சிலையை உருவாக்குவது என்பது ரொம்பவே பெர்சனலாக உணர வைக்கிறது. அப்படி இந்த சிலை உருவான நாளிலிருந்து எங்கள் வீட்டில் பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட துவங்கி விடுகிறது” என்று கூறியுள்ளார்.