தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் கடந்த 10 வருடங்களில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. இந்த படத்திற்கு மலையாளம் மட்டுமல்லாது தென்னிந்திய அளவிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து படம் எப்போது துவங்கும், வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
அது மட்டுமல்ல இந்த படம் ஹிந்தியிலும் இரண்டு பாகங்கள் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகின. இதில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடித்திருந்தார். அதனால் தற்போது மலையாளத்தை விட ஹிந்தியில் இந்த படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என அஜய் தேவ்கன் ஆர்வம் காட்டி வருகிறார். அதே சமயம் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கும் என்று அவர் அறிவித்திருந்தார். ஜீத்து ஜோசப் கூட அதே அக்டோபரில் தான் இந்த படத்தை துவங்க போகிறோம் என்று கூறியிருந்தார். இரண்டு படங்களும் ஒரே தேதியில் தான் ரிலீஸாக போகின்றன என்றும் கூட சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் சமீபத்திய பேட்டியில் ஜீத்து ஜோசப் கூறும்போது, “திரிஷ்யம் 3 படம் முதலில் மலையாளத்தில் தான் வெளியாகும். அதன்பிறகு தான் ஹிந்தியில் வெளியாகும். திரிஷ்யம் 3 ஸ்கிரிப்ட்டுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்னதாக அவர்களாக ஒரு புதிய வெர்சனை எழுதி படமாக இயக்கினால் நிச்சயமாக அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அவர்கள் அப்படி செய்வார்கள் என நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.