தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள திரையுலகில் மோகன்லாலின் 45 வருட கலைச்சேவை மற்றும் அவரது வாழ்நாள் சாதனை ஆகியவற்றை கவுரவிக்கும் விதமாக சமீபத்தில் மத்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருதை பெற்ற மோகன்லாலை தனது பங்கிற்கு கேரள மாநில அரசும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்ட விழா எடுத்து பாராட்டியது.
இந்த நிகழ்வில் மூத்த எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசும்போது, “20 வருடங்களுக்கு முன்பு நான் இப்படி தாதா சாகேப் பால்கே விருது வாங்கியபோது யாரும் எனக்கு விழா எடுத்து கவுரவிக்கவில்லை. முதல்வர் பினராயி விஜயன் தனி கவனம் எடுத்து மோகன்லாலுக்கு இந்த விழாவை நடத்துகிறார்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் “இத்தனை வருடங்களில் மோகன்லால் என்னுடைய ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. காரணம் மோகன்லால் எனது கதைகளுக்கு பொருந்தமாட்டார்” என்றும் கூறினார். இவரது இந்த பேச்சு சோசியல் மீடியாவில் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகரான பைஜூ சந்தோஷ் இது குறித்து கூறும்போது, “அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் மோகன்லால் நடிக்காததால் தான் அவர் இந்த சூப்பர் ஸ்டார் என்கிற நிலைக்கு வர முடிந்தது” என்று கிண்டலாக தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.