தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஏற்கனவே திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. சமீப நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. அதில் சர்ச் ஒன்றில் மோகன்லால், மீனா உள்ளிட்ட குடும்பத்தினர் வழிபடுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டன. படப்பிடிப்பை பார்ப்பதற்கு அந்த பகுதி மக்கள் திரளாக கூடினார்கள். அந்த பகுதியைச் சேர்ந்த லீலா மணியம்மா என்கிற 80 வயது மூதாட்டி மோகன்லாலின் தீவிர ரசிகை. மோகன்லாலின் தீவிர ரசிகையான லீலா மணியம்மா அவரது படம் ஒன்று கூட விடாமல் தியேட்டருக்கே சென்று பார்த்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.
மோகன்லாலின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு தனது பேரனை அழைத்துக் கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவர், உள்ளே செல்ல முடியாமல் வெகு நேரம் காத்துக் கிடந்தார். படக்குழுவினரிடம் மோகன்லாலை சந்தித்து விட்டு தான், நான் இங்கிருந்து கிளம்புவேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் படப்பிடிப்பு பிசியில் உரிய நேரத்தில் அந்த தகவல் அவருக்கு சொல்லப்படவில்லை. பின்னர் இந்த தகவலை கேள்விப்பட்ட மோகன்லால், மாலை 5 மணி அளவில் உடனடியாக அந்த மூதாட்டியை அழித்து வர செய்து நலம் விசாரித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.