நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? |

கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் தொடரும். தருண் மூர்த்தி இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக ஷோபனா நடித்திருந்தார். குடும்ப கதை அம்சத்துடன் ஆக் ஷன் பின்னணி கலந்து உருவான இந்த படம் 230 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து மோகன்லாலும் இயக்குனர் தருண் மூர்த்தியும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்று சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் தருண் மூர்த்தி டைரக்ஷனில் மோகன்லால் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தள்ளுமால, அஞ்சாம் பாதிரா உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஆசிக் உஸ்மான் புரடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் தருண் மூர்த்தி தற்போது பிரேமலு பட நாயகன் நஸ்லேனை வைத்து டார்பிட்டோ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டு, அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் ஆபரேஷன் கம்போடியா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் வேலைகளும் முடிவடைந்த பிறகு மோகன்லால் படத்தை இயக்குவார் என தெரிகிறது.