தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை கடந்த அக்டோபர் மாதமே திறந்து கொள்ளலாம் என மத்திய அரசு தளர்வு அறிவித்தது. ஆனால் கேரளாவிலோ கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களை திறக்க தடை விதித்திருந்தது அந்த மாநில அரசு. இந்தநிலையில் ஜன-5 முதல் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து திரையரங்குகளை திறந்துகொள்ள கேரள அரசு விதிமுறைகளுடன் தளர்வுகளை அறிவித்தது. இந்தநிலையில் தற்போது எதிர்பாராத புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளதால் இன்னும் கேரளாவில் திரையரங்குகளை திறப்பதில் இழுபறி நீடிக்கிறது.
அதாவது கேரளா பிலிம் சேம்பர், அரசு விதித்துள்ள அதிகப்படியான வரிச்சுமையை விலக்குவதோடு மற்றும், ஊரடங்கு காலகட்டத்திற்கான மின் கட்டணத்தில் சலுகையும் அளிக்கவேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது. அதேபோல இன்னொரு பக்கம் விநியோகஸ்தர்களோ திரையரங்கு உரிமையாளர்கள், தங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை திருப்பி செட்டில் செய்தால் மட்டுமே புதுப்படங்களை ரிலீஸ் செய்வோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த எதிர்பாராத புதிய சிக்கலை தீர்த்து வைக்கும் முயற்சியில் தற்போது கேரள பிலிம் எக்ஸிபிடர்ஸ் சங்க தலைவராக இருக்கும் நடிகர் திலீப் இறங்கியிருக்கிறாராம்.