துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு |
கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகி இயக்கிய, லூசிபர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கு போவதாகவும் அந்தப்படத்திற்கு எம்புரான் என டைட்டில் வைத்திருப்பதாகவும் பிரித்விராஜும் மோகன்லாலும் இணைந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். இதையடுத்து முதல் பாகத்திற்கு கதை எழுதிய, நடிகரும், கதாசிரியருமான முரளிகோபி இந்த இரண்டாம் பாகத்தின் முழு கதையையும் தற்போது பிரித்விராஜிடம் ஒப்படைத்து விட்டார்.
ஆனால் பிரித்விராஜ், மோகன்லால் இருவரும் மாறிமாறி தங்களது படங்களில் நடித்து வருவதால், எம்பிரான் படம் எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி வருகிறது.. இந்த வருடம் படப்பிடிப்பு துவங்கும் என, பிரித்விராஜ் ஏற்கனவே கூறிவந்த நிலையில், தற்போது மோகன்லாலை சந்தித்து இதுகுறித்து பேசி வந்துள்ளார் பிரித்விராஜ். விரைவில் அதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்பதற்கு அடையாளமாக தாங்கள் எடுத்துக்கொண்ட செல்பியை வெளியிட்டு, ரசிகர்களுக்கு சூசகமாக செய்தி சொல்லியிருக்கிறார் பிரித்விராஜ்.