தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகி இயக்கிய, லூசிபர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கு போவதாகவும் அந்தப்படத்திற்கு எம்புரான் என டைட்டில் வைத்திருப்பதாகவும் பிரித்விராஜும் மோகன்லாலும் இணைந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். இதையடுத்து முதல் பாகத்திற்கு கதை எழுதிய, நடிகரும், கதாசிரியருமான முரளிகோபி இந்த இரண்டாம் பாகத்தின் முழு கதையையும் தற்போது பிரித்விராஜிடம் ஒப்படைத்து விட்டார்.
ஆனால் பிரித்விராஜ், மோகன்லால் இருவரும் மாறிமாறி தங்களது படங்களில் நடித்து வருவதால், எம்பிரான் படம் எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி வருகிறது.. இந்த வருடம் படப்பிடிப்பு துவங்கும் என, பிரித்விராஜ் ஏற்கனவே கூறிவந்த நிலையில், தற்போது மோகன்லாலை சந்தித்து இதுகுறித்து பேசி வந்துள்ளார் பிரித்விராஜ். விரைவில் அதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்பதற்கு அடையாளமாக தாங்கள் எடுத்துக்கொண்ட செல்பியை வெளியிட்டு, ரசிகர்களுக்கு சூசகமாக செய்தி சொல்லியிருக்கிறார் பிரித்விராஜ்.