இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் தற்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ்.. இவர் தனுஷ் நடித்த மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தவர். கொரோனா தாக்கத்திற்கு பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கயத்தில் இருந்து அதிக படங்களில் நடித்து வரும் நடிகர் இவர் ஒருவராகத்தான் இருக்கும்..
கடந்த அக்டோபர் மாதம் 'களா' என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, சண்டைக்காட்சியில் எதிர்பாராத விதமாக இவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு சிகிச்சை பெற்று ஓய்வெடுத்தவர், நவம்பர் முதல் வாரத்தில், தான் நடிக்கும் இன்னொரு படமான 'கானேக்கனே' என்கிற படத்தின் படப்பிடிப்பில் தான் அவர் கலந்துகொண்டு நடித்து முடித்தார்.
இதனை தொடர்ந்து காயம் நன்கு குணமானதும் ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்ட 'களா' படத்த முடித்துக்கொடுத்து விட்டு, வழக்கு என்கிற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆச்சர்யமாக இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 12 நாட்களிலே நடத்தி முடிக்கப்பட்டது. கலை படங்களை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனர் .சனல்குமார் சசிதரன் தான் இந்தப்படத்தின் இயக்குனர் என்பதாலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு தேக்குமர தோட்டத்திலே படமாக்கப்பட்டன என்பதாலும் படப்பிடிப்பு விரைவிலேயே முடிவடைந்து விட்டதாம்.