தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யாவுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது. தற்போது தெலங்கானா மாநிலத்தில் கிழக்கு கோதாவரி ஆற்றில் நாகசைதன்யா நடிக்கும் 'லவ் ஸ்டோரி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நாகசைதன்யா படகு சவாரி செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. .
அப்போது ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் இருந்து படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த ரசிகர்கள் கோஷமிட்டு நாகசைதன்யாவின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தனர். அதில் தீவிர ரசிகர் ஒருவர், வெகு அருகில் சென்று நாகசைதன்யாவை பார்க்க வேண்டும் என்பதற்காக பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து நாகசைதன்யாவின் படகை நோக்கி நீந்தி செல்லும் வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதன்பின் அந்த ரசிகரை தனது படகில் ஏற்றிய நாகசைதன்யா, அவரை தனது கேரவனுக்கு அழைத்து சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவருக்கு அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தார் நாகசைதன்யா.