கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

கொரோனா தாக்கம் காரணமாக கேரளாவில் கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகளை, இந்த வருடம் ஜன-13 முதல் இயங்கலாம் என கேரள அரசு அறிவித்தது. அதேசமயம் மூன்று காட்சிகளை மட்டுமே நடத்தி கொள்ளலாம் என்றும் இரவு 9 மணிக்கு மேல் படங்களை திரையிட கூடாது என்று நிபந்தனையும் விதித்திருந்தது. கேரளாவை பொறுத்தவரை செகன்ட் ஷோக்களில் தான் அதிக அளவு வசூலாவது வழக்கம் இதனால் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களே தியேட்டர் ரிலீஸை தவிர்த்து ஓடிடி தளங்களை தேடி சென்றன..
இந்த நிலையில் வரும் நாளை (மார்ச்-11) முதல் இரவு 9 மணி காட்சியையும் திரையிடலாம் என, கேரள அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, மம்முட்டி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் 'தி பிரைஸ்ட்' என்கிற படம், நாளை (மார்ச்-11) ரிலீஸாகும் என உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த மார்ச்-4ஆம் தேதியே ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்தப்படம், திடீரென ரிலீஸ் தேதியை கேன்சல் செய்தது. அதற்கு பதிலாக ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என படக்குழுவினர் யோசித்து வந்தநிலையில் தான், அரசின் நிபந்தனை தளர்வு அவர்களது முடிவை மாற்றிவிட்டது..