துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாள சினிமாவின் ஆக்சன் பட இயக்குனர்களின் பிதாமகன் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஜோஷி. முன்னணி நடிகர்களை மட்டுமே வைத்து படங்களை இயக்கிவந்த இவர், கடந்த சில வருடங்களாக இறங்கு முகத்தில் இருக்கிறார். இந்தநிலையில் இவரது பல வெற்றிப்படங்களில் நடித்த சுரேஷ்கோபி, இவரை கைதூக்கி விடும் விதமாக நட்புக்கரம் நீட்டியுள்ளார். அந்தவகையில் பாப்பன் என்கிற படம் இவர்களது கூட்டணியில் தற்போது உருவாகி வருகிறது.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை கனிகா இணைந்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன் இதே ஜோஷி டைரக்சனில், 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' என்கிற படத்தில் சுரேஷ்கோபிக்கு ஜோடியாக கனிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. 'பாப்பன்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஜோஷியுடனும் சுரேஷ்கோபியுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனிகா, “மீண்டும் என் குடும்பத்தில் இணைந்தது போல உள்ளது” என கூறியுள்ளார்.