உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண். இவருக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவவில் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜன சேனா என்ற கட்சியை தொடங்கி அதை நடத்தியும் வருகிறார். தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ரசிகர் ஒருவரை நேரில் சந்தித்து அவருக்கு உதவி செய்து அனைவரிடன் பாராட்டையும் பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள லிங்கலா கிராமத்தில் வசித்து வரும் பார்கவா என்பவர் தீவிரமான பவன் கல்யாண் ரசிகர். 19 வயதான பார்கவாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நிலை புற்று நோயால் உயிருக்கு போராடி வருகிறார். பார்கவாவைப் பற்றிக் கேள்விப்பட்ட பவன் கல்யாண் அவரை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் பார்கவாவின் மருத்துவச் செலவுகளுக்கு 5லட்ச ரூபாயும், வெள்ளி விநாயகர் சிலையையும் வழங்கினார்.