மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண். இவருக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவவில் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜன சேனா என்ற கட்சியை தொடங்கி அதை நடத்தியும் வருகிறார். தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ரசிகர் ஒருவரை நேரில் சந்தித்து அவருக்கு உதவி செய்து அனைவரிடன் பாராட்டையும் பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள லிங்கலா கிராமத்தில் வசித்து வரும் பார்கவா என்பவர் தீவிரமான பவன் கல்யாண் ரசிகர். 19 வயதான பார்கவாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நிலை புற்று நோயால் உயிருக்கு போராடி வருகிறார். பார்கவாவைப் பற்றிக் கேள்விப்பட்ட பவன் கல்யாண் அவரை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் பார்கவாவின் மருத்துவச் செலவுகளுக்கு 5லட்ச ரூபாயும், வெள்ளி விநாயகர் சிலையையும் வழங்கினார்.