தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் கேரளாவில் மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த ஜனவரி மாதமே திறக்கப்பட்டாலும் மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்பட்டன. இரவுக்காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் மோகன்லால் கூட தனது த்ரிஷ்யம்-2 படத்தை ஓடிடி தளத்தில் தான் ரிலீஸ் செய்தார். இந்தநிலையில் நேற்று முதல் (மார்ச்-11) இரவுக்காட்சியையும் சேர்த்து நான்கு காட்சிகளை திரையிட்டுக்கொள்ள கேரள அரசு அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து நேற்று முதல் படமாக மம்முட்டி நடித்த 'தி பிரைஸ்ட்' என்கிற படம் தியேட்டர்களில் வெளியானது. கொரோனா தாக்கத்திற்கு பிறகு, நீண்ட நாட்கள் கழித்து, தியேட்டர் அதிபர்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கும் விதமாக பல இடங்களில் பல காட்சிகளுக்கு ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் நிறைய பார்க்க முடிந்தது.
மர்ம த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து முதன்முதலாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார் என்பதும் தியேட்டர்களுக்கு அதிகம் ரசிகர்கள் வர காரணமாக அமைந்தது என்று தியேட்டர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.