இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
காளிதாஸ் ஜெயராம் தற்போது மலையாளத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் வினில் வர்கீஸ் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். கதாநாயகிகளாக நமீதா பிரமோத் மற்றும் 'பிகில்' படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் இருவரும் நடிக்கின்றனர். ஆனால் கடந்த வருடம் மார்ச் மாதமே இந்தப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படத்தின் பூஜையும் நடைபெற்றது. ஆனால் கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடைபெறவில்லை.
ஆனால் இந்த ஒரு வருடத்தில் படத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடந்துவிட்டன. முதலில் இந்தப்படத்தின் நாயகிகளாக அறிவிக்கப்பட்ட மியா ஜார்ஜ் மற்றும் புதுமுகம் ரியா ஆகியோர் இந்தப்படத்தில் இப்போது இல்லை.. அதேபோல இந்தப்படத்தை 3 டாட்ஸ் ஸ்டுடியோ என்கிற நிறுவனம் தான் தயாரிப்பதாக கடந்த வருடம் பூஜையெல்லாம் போட்டது. ஆனால். இப்போதோ அந்த நிறுவனம் விலகிக்கொள்ள நவரசா பிலிம்ஸ் என்கிற புதிய நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது.
மியா ஜார்ஜுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அவர் இந்தப்படத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் என்றும், புதுமுகம் ரியாவை அறிமுகப்படுத்தி ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்பதால் ஓரளவு பிரபலமான நடிகைகளையே தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.