குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக நடித்துவரும் நடிகர் மோகன்லால் தனது நீண்டநாள் கனவான டைரக்சன் துறையில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளார். அவர் முதன்முதலாக இயக்கும் 'பாரோஸ்' என்கிற படத்தின் துவக்க விழா பூஜை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பேண்டசி படமாக உருவாகும் இந்தப்படத்தின் கதையை 'மைடியர் குட்டிச்சாத்தான்' பட இயக்குனர் ஜிஜோ பொன்னூஸ் தான் எழுதியுள்ளார். நேற்று நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட ஜிஜோ பொன்னூஸ், பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒரு புதிய தகவல் ஒன்றை கூறினார்.
'இந்தப்படத்தின் கதையை தான் பல வருடங்களாக உருவாக்கினேன். இதை மோகன்லாலிடம் சொன்னபோது தானே இயக்குவதாக அவர் கூறினார். ஆனால் குழந்திகளுகான பேண்டசி கதையாக இதை நான் எழுதியிருந்தேன். மோகன்லால் முதன்முதலாக இயக்கம் படம் என்பதால் இது இளைஞர்களையும் கவரும் விதமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இந்த கதையை மோகன்லாலிடம் கூறியபோதே அவரது மகள் விஸ்மாயாவும் இந்த கதையை கேட்டுவிட்டு, இளைஞர்களை கவரும் விதமாக இதில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம், என்ன விஷயங்களை புதிதாக சேர்க்கலாம் என கூறினார். அவரது ஆலோசனையையும் மனதில் வைத்து பைனல் ஸ்கிரிப்ட்டை உருவாக்கினோம்” என கூறினார்.