இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.. இவர் தெலுங்கில் கே.ராகவேந்திர ராவ் இயக்கத்தில் அறிமுகமான 'கங்கோத்ரி' என்கிற படம் வெளியாகி பதினெட்டு ஆண்டுகள் ஆகிறது. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இதை விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இதனை நினைவு கூர்ந்துள்ள அல்லு அர்ஜுன், ”என்னுடைய இந்த பதினெட்டு ஆண்டு பயணத்தில் உடன் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. என் மனம் முழுதும் நன்றியால் நிரம்பி வழிகிறது. இத்தனை ஆண்டுகளால் என் மீது காட்டப்பட்டு வந்த அளவற்ற அன்பினால் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டுளேன்” என கூறியுள்ளார்.
கங்கோத்ரி படத்தில் அறிமுகமானாலும் அடுத்ததாக சுகுமார் இயக்கத்தில் வெளியான ஆர்யா படம் தான் அல்லு அர்ஜுனை முன்னணி நடிகராக உயர்த்தியது. தற்போது அதே சுகுமார் இயக்கத்தில் தான், 'புஷ்பா' என்கிற படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.