தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.. இவர் தெலுங்கில் கே.ராகவேந்திர ராவ் இயக்கத்தில் அறிமுகமான 'கங்கோத்ரி' என்கிற படம் வெளியாகி பதினெட்டு ஆண்டுகள் ஆகிறது. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இதை விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இதனை நினைவு கூர்ந்துள்ள அல்லு அர்ஜுன், ”என்னுடைய இந்த பதினெட்டு ஆண்டு பயணத்தில் உடன் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. என் மனம் முழுதும் நன்றியால் நிரம்பி வழிகிறது. இத்தனை ஆண்டுகளால் என் மீது காட்டப்பட்டு வந்த அளவற்ற அன்பினால் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டுளேன்” என கூறியுள்ளார்.
கங்கோத்ரி படத்தில் அறிமுகமானாலும் அடுத்ததாக சுகுமார் இயக்கத்தில் வெளியான ஆர்யா படம் தான் அல்லு அர்ஜுனை முன்னணி நடிகராக உயர்த்தியது. தற்போது அதே சுகுமார் இயக்கத்தில் தான், 'புஷ்பா' என்கிற படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.