தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாளத்தில் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக வில்லன் நடிகராகவும் சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தவர் தான் நடிகர் பிஜுமேனன். தமிழில் தம்பி, பழனி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மலையாளத்தில் வெள்ளிமூங்கா என்கிற படத்தில், கதையின் நாயகனாக நடித்திருந்தார் பிஜு மேனன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, முன்னணி நடிகர்களின் வரிசைக்கு உயர்ந்தார் பிஜுமேனன்.
அந்த படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் ஜிபு ஜேக்கப். அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு மோகன்லால் நடித்த 'முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்' என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் படம் வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் ஆத்ய ராத்திரி என்கிற படத்தை தன்னை வைத்து இயக்கும் வாய்ப்பைத் தந்தார் பிஜுமேனன் அந்த படமும் தோல்வியை தழுவியது.
தற்போது கர்ணன் பட நாயகி ரஜிஷா விஜயனை வைத்து 'எல்லாம் சரியாகும்' என்கிற படத்தை இயக்கி உள்ளார் ஜிபு ஜேக்கப். இந்த நிலையில் ஜிபு ஜேக்கப்புக்கு கைகொடுத்து தூக்கிவிடும் விதமாக, மீண்டும் அவரது டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் பிஜுமேனன். தற்போது அவர் எடுத்து வரும் பட டைட்டில் பாணியில் சொல்வதென்றால் இனி ஜிபு ஜேக்கப்பிற்கு எல்லாம் சரியாகும் என்று சொல்லலாம்.