இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், பிரித்விராஜை வைத்து இயக்கிய 'மும்பை போலீஸ்' என்கிற படம் சூப்பர் ஹிட்டானது. வழக்கமான போலீஸ் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு த்ரில்லர் படமாக உருவான இந்த படம் கிளைமாக்ஸ் டுவிஸ்ட்டுக்காகவும், படத்தில் கையாளப்பட்ட வித்தியாசமான ஒரு விஷயத்திற்காகவும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில் அந்த படம் வெளியாகி நேற்றோடு எட்டு வருடங்களை கடந்து உள்ளது
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், மேலும் இந்த படம் விரைவில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது என்றும் அறிவித்துள்ளார். தொடர்ந்து பல வருடங்களாகவே இந்த படத்தை நீங்கள் ஏன் ரீமேக் செய்யக்கூடாது என, தன்னிடம் பலர் கேட்டு வந்ததாகவும், தற்போது அதற்கு உரிய நேரம் வந்து விட்டதாகவும் கூறியுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் சல்யூட் என்கிற படத்தை இயக்கி வரும் ரோஷன் ஆண்ட்ரூஸ், அதை முடித்துவிட்டு இந்தப்படத்தை இயக்குவார் என தெரிகிறது.
ஆனால் இந்த படம் எந்த மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது என்பது பற்றியெல்லாம் எந்த தகவலும் அவர் கொடுக்கவில்லை. அதேசமயம் எந்த மொழிக்கும் பொருந்தும் கதைக்களம் என்பதாலும், ஏற்கனவே ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழில் 36 வயதினிலே என்கிற படத்தை இயக்கி இருப்பதாலும் இந்த படம் தமிழில் ரீமேக்காவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது