வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி தற்போது 'ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு 15 நாட்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் கொரானோ தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரியவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்காமல் வேறு எந்தப் படத்திலும் நடிக்க சிரஞ்சீவி விரும்பவில்லையாம். அதனால், அவர் நடிக்க வேண்டிய அனைத்துப் படங்களையும் தள்ளி வைத்துவிட்டார் என்கிறார்கள்.
மலையாளத்தில் வெளிவந்த 'லூசிபர்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பூஜையும் நடந்தது. சிரஞ்சீவி நடிக்கும் அப்படத்தை மோகன்ராஜா இயக்கவிருந்தார். அடுத்து தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'வேதாளம்' படத்தையும் ரீமேக் செய்ய இருந்தார். அவற்றோடு ஒரு நேரடி தெலுங்குப் படத்திலும் நடிக்க முடிவு செய்திருந்தார். இந்த மூன்று படங்களையும் தள்ளி வைத்துவிட்டாராம்.
தற்போதுள்ள நிலையில் 'ஆச்சார்யா' படப்பிடிப்பை மீண்டும் நடத்தி அப்படத்தை வெளியிட ஆகஸ்ட் மாதம் ஆகலாம். அதற்குப் பிறகே நடிக்க வேண்டிய மற்ற மூன்று படங்களைப் பற்றி திட்டமிட உள்ளார்களாம்.