முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
உலகெங்கும் சகோதரர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள் பலர் சகோதரர் தின வாழ்த்துக்களையும் பதிவுகளையும் வெளியிட்டாலும், தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் சிறுவயது சிரஞ்சீவி தனது கையில் இளைய சகோதரர் நடிகர் பவன் கல்யாணை தூக்கி வைத்தபடி நின்றிருக்க, அருகில் அவர்களது இன்னொரு சகோதரர் நாகபாபு நிற்கிறார். சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த புகைப்படத்தில் பவன் கல்யாணை சிரஞ்சீவி தூக்கி வைத்திருப்பதை பார்க்கும்போது, சினிமாவிலும் அவர் நல்ல உயரத்திற்கு வரவேண்டும் என ஒரு சகோதரனாகவும் அடித்தளமிட்டு தந்ததை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.