போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வருபவர் பின்னணி பாடகி மதுபிரியா. சாய்பல்லவி நடித்த பிதா' படத்தில் 'வச்சிண்டே' என்கிற பாடலை பாடிய இவர், மகேஷ்பாபு நடித்த 'சரிலேறு நீக்கெவரு' படத்தில் ஹிட்டான 'ஹே சோ க்யூட்' பாடலையும் பாடியுள்ளார்.
இவர் தற்போது சோஷியல் மீடியா மூலமாக, மர்மநபர்கள் சிலர் தனக்கு தேவையில்லாத போன் அழைப்புகள் மற்றும் அருவறுக்கத்தக்க கமெண்ட்டுகள் மூலமாக தொந்தரவு கொடுத்து வருவதாக சைபர் கிரைம் போலீசில் ஈமெயில் மூலமாக புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு வந்த போன் அழைப்புகளுக்கான எண்களையும் அவர் போலீஸில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 509, 354(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், இதற்கென ஒரு தனி குழுவை நியமித்து விசாரித்து வருகின்றனர். மேலும் பெண்களின் பிரச்சனைகளில் முக்கிய கவனம் எடுத்து செயல்பட்டு 'அவள் (SHE) போலீசார் வசம் இந்த வழக்கை மாற்றவும் முடிவு செய்துள்ளனராம்.