தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை, மலையாளம் தவிர வேறு எந்த மொழியிலும் நடிப்பதற்கு, தனக்கு சரிப்படாது என்று கூறிவந்த நடிகர் பஹத் பாசில், தனது முடிவை மாற்றிக் கொண்டு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்கிற படத்தில் வில்லனாக, போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் காட்சிகள் பாதிக்குமேல் படமாக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் மலையாளத்தில் அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடித்த அதிரன் என்கிற படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அனுகோனி அதிதி என்கிற பெயரில் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பஹத் பாசிலுக்காக தெலுங்கில் டப்பிங் பேசி இருப்பவர் தருண் என்கிற டப்பிங் கலைஞர். இவரது குரல் பகத் பாசிலுக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளதாம்.
இதை கேள்விப்பட்ட புஷ்பா படக்குழுவினர் இந்த படத்தின் டப்பிங்கை பார்த்துவிட்டு, தங்களது படத்திலும் பஹத் பாசிலுக்கு தருணே டப்பிங் பேச வேண்டுமென கூறிவிட்டார்களாம். இனி பஹத் பாசில் நடிக்கும் தெலுங்கு படங்களுக்கு, தருண் தான் தொடர்ந்து குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்