ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை, மலையாளம் தவிர வேறு எந்த மொழியிலும் நடிப்பதற்கு, தனக்கு சரிப்படாது என்று கூறிவந்த நடிகர் பஹத் பாசில், தனது முடிவை மாற்றிக் கொண்டு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்கிற படத்தில் வில்லனாக, போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் காட்சிகள் பாதிக்குமேல் படமாக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் மலையாளத்தில் அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடித்த அதிரன் என்கிற படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அனுகோனி அதிதி என்கிற பெயரில் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பஹத் பாசிலுக்காக தெலுங்கில் டப்பிங் பேசி இருப்பவர் தருண் என்கிற டப்பிங் கலைஞர். இவரது குரல் பகத் பாசிலுக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளதாம்.
இதை கேள்விப்பட்ட புஷ்பா படக்குழுவினர் இந்த படத்தின் டப்பிங்கை பார்த்துவிட்டு, தங்களது படத்திலும் பஹத் பாசிலுக்கு தருணே டப்பிங் பேச வேண்டுமென கூறிவிட்டார்களாம். இனி பஹத் பாசில் நடிக்கும் தெலுங்கு படங்களுக்கு, தருண் தான் தொடர்ந்து குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்