ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
போக்கிரி, பிசினஸ்மேன் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் லிகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சினிமா மட்டுமின்றி அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வீடியோக்கள் மூலம் ஏதாவது ஒரு முக்கிய விசயத்தை பற்றி விவாதிப்பது இவரது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒவ்வொருவருடைய சோஷியல் மீடியா கணக்கையும், அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமென ஒரு கோரிக்கை வைத்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாளுக்கு நாள் சோஷியல் மீடியாவில், பிடிக்காதவர்களை ட்ரோல் செய்வதும் அவதூறு பரப்புவதும் அதிகரித்து வருகிறது சமீபத்தில் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட அன்னை தெரசாவின் புகைப்படத்திற்கு ஆயிரம் லைக்குகள் தான் வந்திருந்தன ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக 10,000 பேர் அந்த புகைப்படத்தை டிஸ்லைக் செய்திருந்தனர். யார் இவர்கள்? என்ன மாதிரி மனநிலை கொண்டவர்கள்? அன்னை தெரசாவின் பக்கத்தில் நிற்பதற்கே தகுதியில்லாத இவர்கள், டிஸ்லைக் செய்வதன் மூலம் என்ன வெளிப்படுத்த விரும்புகிறார்கள்?” என்று கேட்டுள்ளார் பூரி ஜெகன்நாத்.
இது போன்றவர்களின் சோஷியல் மீடியா கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும்போது தான், அவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்கிற விவரம் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.