இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் சண்டைக்காட்சிகளிலும் மற்றும் அவர்கள் இரண்டு வேடங்களில் நடிக்கும் படங்களிலும் அவர்களுக்கு டூப் ஆக நடிப்பதற்கு என்று சிலர் இருப்பார்கள். அவர்கள் நடிகர்களாகவோ அல்லது ஸ்டண்ட் கலைஞர்களாகவோ இருப்பது வழக்கம். ஆனால் மலையாளத்தில் மோகன்லால் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்த ராவண பிரபு என்கிற படத்தில் அவருக்கு டூப் ஆக நடித்தவர், ராஜன் கோயிலாண்டி என்கிற உதவி கலை இயக்குனர்.
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக, சினிமாவில் கலை இயக்குனர் பிரிவில் பணியாற்றி வந்த ராஜன் தனக்கென எதுவும் பெரிதாக சேர்த்து வைக்கவில்லை. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக எந்த வேலைகளும் நடைபெறாத நிலையில், மாவூர் என்கிற பகுதியில் உள்ள பார் ஒன்றில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்துள்ளார் ராஜன். சினிமாவில் வேலை பார்ப்பவர்களுக்கு நிரந்தரம் என எதுவும் இல்லை, அடுத்த வேளை உணவு வேண்டுமென்றால் எந்த வேலையும் பார்க்க தயங்கக்கூடாது என்பதால்தான் செக்யூரிட்டி பணியில் சேர்ந்ததாக கூறுகிறார் ராஜன்.