மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு மலையாள சினிமா மொத்தமாக முடங்கி விட்டது. அதனால் ஓடிடி தளங்கள் அங்கு வேமாக வளர்ந்து வருகிறது. மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 ஓடிடி தளத்தில் வெளியானது 3 படங்களுமே தயாரிப்பாளருக்கும், ஓடிடி தளத்திற்கும் லாபத்தை கொடுத்தது. நயன்தாரா நடித்த நிழல் படம் ஓடிடியில் வெளிவந்தாலும் அது பெரிய வரவேற்பை பெறவில்லை.
கொரோனா தொற்றுக்கு பிறகு முதன் முதலில் வெளியானது பகத் பாசில் நடித்த சி யூ சூன் என்ற திகில் படம். ஊரங்கு காலத்தில் செல்போனில் படம்பிடிக்கப்பட்ட இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஜோஜி படம் வெளியானது. அதுவும் வெற்றி பெற்றது.
தற்போது பகத் பாசிலின் 3வது படமாக மாலிக் வெளியாக இருக்கிறது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த மாதம் 13ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தியேட்டர் அதிபர்கள் சங்கத்திற்கும் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் கடிதம் எழுதியுள்ளார். ஆண்டோ ஜோசப்பின் முடிவை எதிர்க்கப் போவதில்லை என்று கேரள திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பகத் பாசில் ஓடிடி வெளியீட்டில் ஹாட்ரிக் அடிக்கிறார்.