தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. நடிகர்கள் பிரகாஷ்ராஜ் - விஷ்ணு மஞ்சு ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்தநிலையில் தற்போது நடிகை ஜீவிதா தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் மும்முனைப்போட்டியாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகை ஜீவிதா மற்றும் அவரது கணவரான நடிகர் ராஜசேகர் ஆகியோர் செயலாளர் மற்றும் நிர்வாக தலைவராக வெற்றி பெறறனர். ஆனால் ராஜசேகர் தற்போதைய தெலுங்கு நடிகர் சங்க தலைவரான நரேசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் ராஜசேகர் போட்டியிடாத நிலையில் ஜீவிதா மட்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்து ஆதரவு திரட்டத் தொடங்கியிருக்கிறார்.