அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்து விட்ட நடிகர் பிரித்விராஜ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக தற்போது இரண்டாவது படத்தையும் மோகன்லாலை ஹீரோவாக வைத்தே ப்ரோ டாடி என்கிற பெயரில் இயக்கி வந்தார். மீனா, கனிகா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கிட்டத்தட்ட இரண்டு மாதம் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் பிரித்விராஜ். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள பிரித்விராஜ், “இரண்டாவது படத்தையும் இயக்கி முடித்து விட்டேன் மோகன்லாலை கேமராவுக்கு முன்னால் நிற்க வைத்து பார்ப்பது ரொம்பவே ஜாலியான அனுபவமாக இருந்தது. நம்பிக்கை வைத்து இந்த படத்தையும் நான் கேட்ட கலைஞர்களையும் கொடுத்த மோகன்லாலுக்கும், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.