2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தெலுங்கு சினிமாவின் வாரிசு நடிகர்களில் ஒருவரான சாய் தரம் தேஜ் நடித்துள்ள ரிபப்ளிக் என்கிற படம் நேற்று ரிலீசாகி இருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக சில நாட்களுக்கு முன்பாக சாய் தரம் தேஜ் மோட்டார் பைக்கில் அதிவேகமாக சென்றபோது விபத்துக்கு உள்ளானார். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் அவரது படம் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பதற்காக சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
அந்த விதமாக நடிகர் அல்லு அர்ஜுன் ரிபப்ளிக் படத்தை புரமோட் பண்ணும் விதமாக தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார். ஆனால் அதுதான் இப்பொழுது ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி அல்லு அர்ஜுனுக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. அந்த டுவீட்டில், "துரதிர்ஷ்டவசமாக எனது சகோதரர் சாய் தரம் தேஜ் இதை பார்ப்பதற்கு இங்கே இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது சாய் தரம் தேஜ் மருத்துவமனையில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு அவர் இவ்வாறு கூறியிருந்தாலும் பொதுவாக ஒருவர் உயிரோடு இல்லாதபோது தான் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்கள், அதனால் அல்லு அர்ஜுன் எப்படி இந்த வார்த்தைகளை கூறலாம் என்று சாய் தரம் தேஜின் ரசிகர்கள் அல்லு அர்ஜுனை விமர்சித்து வருகிறார்கள்.