2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து பெற்று முன்னணி நாயகி வரிசைக்கு உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதே சமயத்தில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.
அந்தப்படம் கொடுத்த நம்பிக்கையில் அடுத்ததாக கதாநாயகர்களுடன் டூயட் பாடுவதை விட கதையின் நாயகியாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக பார்த்து தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. இதே பாணியில் விளையாட்டு வீராங்கனையாக அவர் நடித்துள்ள குட்லக் சகி படத்திலும் நடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த வயதிலேயே நாம் இப்படி கதையின் நாயகியை மையப்படுத்திய கதாபாத்திரங்களாக தொடர்ந்து நடிப்பது தவறு என்பதை புரிந்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.. இதையடுத்து இனி கொஞ்ச காலத்திற்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமே நடிப்பது என முடிவு செய்துவிட்டாராம் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்க்காரு வாரி பாட்டா என்கிற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது..