ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் |
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரானா தொற்று படிபடியாக குறைந்து வருவதால், பள்ளிகள் அடுத்தடுத்து திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் கற்றல் இடைவெளி மிகவும் குறைந்துவிட்டதாக பெற்றோரிடமிருந்து பல புகார்கள் அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்த புகாரின் அடிப்படையில் துவங்கப்பட்ட திட்டம்தான் 'இல்லம் தேடிக் கல்வி'. இந்த திட்டம் மூலம் ஆசிரியர்கள் வீடு தேடி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவிருக்கிறார்கள்.
இந்த திட்டம் முதல்வர் ஸ்டாலினால் துவங்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பேசியுள்ள அவர், இனிது, இனிது கற்றல் இனிது. இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நம்ம மாணவர்களோட கற்றல் இடைவெளியை குறைக்க 'இல்லம் தேடிக் கல்வி' என்ற அருமையான திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. நம்ம மாணவ, மாணவிகளுடைய கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாக விளையாட்டு முறையில் எழுதவும், படிக்கவும், கல்வி ஆர்வலர்கள் சொல்லி தரப்போகிறார்கள்.
உரிய பாதுகாப்பு வழிமுறையோடு இல்லம் தேடிக்கல்வி என்ற திட்டத்தில் அனைத்து குழந்தைகளும் பயன்பெற பெற்றோரும், ஊர்மக்களும் ஊக்குவிப்போம். உறுதி செய்வோம். நம்ம குழந்தைகளோட கல்வி மீது ஆர்வமும், அக்கறையும் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய நேரம் இது என்று அந்த விழிப்புணர்வு வீடியோவில் நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.