'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த 'துணைவன்' சிறுகதையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் 'விடுதலை'. பல வெற்றிப் படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார். சூரியுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இளையராஜா இசையில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சத்தியமங்கலம் காடுகளில் கடும் குளிரில் படமாக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட ஷூட்டிங் செங்கல்பட்டு அருகே நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இந்த படத்தில் சூரிக்காக தனுஷ் குரல் கொடுத்துள்ளார். படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை தனுஷ் பாடியுள்ளார். இந்த பாடலை இளையராஜா தனுசுக்கு காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை 4 மணி நேரம் சொல்லிக் கொடுத்து பாட வைத்துள்ளார். இதை வெற்றிமாறனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.