இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த படம் இந்தியன்-2. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இந்தியன்-2வை கிடப்பில் போட்டு விட்டு, ராம்சரணை வைத்து தெலுங்கு படத்தை இயக்க தயாரானார் ஷங்கர்.
ஆனால் அதை எதிர்த்து லைகா நிறுவனம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இரண்டு தரப்பிலும் சமாதானம் ஏற்படாத நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதியை இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காணும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதையடுத்து, நடந்த விசாரணைக்குபிறகு தெலுங்கு படத்தை ஷங்கர் இயக்க தடையில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆனபோதிலும் லைகா நிறுவனம் தொடர்ந்து இந்தியன்-2 படத்தை இயக்கிய பிறகுதான் வேறு படத்தை இயக்க ஷங்கரை அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்தியன்-2 வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஷங்கர்-லைகா நிறுவனத்திற்கிடையிலான பிரச்சினையை மீண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி பேசி தீர்த்து வைப்பார் என்று அந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர். அதனால் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுவது குறித்து விரைவில் ஒரு நல்ல முடிவு வெளியாகும் என்று தெரிகிறது.