பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்-ராம் சரண் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் சங்கராந்தியை முன்னிட்டு வருகிற ஜனவரி 7ம் தேதி வெளியாகிறது. அதேபோல் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் ஜனவரி 14-ந்தேதி வெளியாக உள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கான மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றுவதில் பலத்த போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராஜமவுலி அளித்துள்ள ஒரு பேட்டியில், சங்கராந்திக்கு ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் படங்கள் மோதுவதால் வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. நான்கு படங்கள் ஒன்றாக வந்தாலும் படங்கள் நன்றாக இருந்தால் மக்கள் அனைத்து படங்களையுமே பார்க்க வருவார்கள். கடந்த காலங்களில் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
சங்கராந்திக்கு இந்த இரண்டு படங்கள் மட்டுமின்றி இன்னும் சில படங்களும் வெளியாக உள்ளன. எல்லா படங்களுமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும் என்று நம்புகிறேன். என் படம் மட்டுமே ஓட வேண்டும், மற்ற படங்கள் ஓடக்கூடாது என்று சொல்லும் நேரம் இதுவல்ல. அனைவருமே ஒன்றிணைந்து பணம் சம்பாதித்தாக வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார் ராஜமவுலி.