ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம். சூர்யா முக்கியத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை(நவ., 2) ஓடிடியில் வெளியாகிறது.
இந்த நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும், அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவது தான் சிறந்ததொரு கலைப்படைப்பு. நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞராக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப் படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் ஏராளம் என்று பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து சூர்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப் பூர்வமான பாராட்டு ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவர் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.