'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம். சூர்யா முக்கியத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை(நவ., 2) ஓடிடியில் வெளியாகிறது.
இந்த நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும், அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவது தான் சிறந்ததொரு கலைப்படைப்பு. நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞராக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப் படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் ஏராளம் என்று பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து சூர்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப் பூர்வமான பாராட்டு ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவர் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.