வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

டிக்டாக்கில் டப்மாஸ் செய்து புகழ்பெற்றவர் மிருனாளினி ரவி. அதுவே அவருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்தது. கொண்டலகொண்டா கணேஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் சாம்பியன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள எனிமி, எம்.ஜி.ஆர் மகன் படங்கள் தீபாவளிக்கு வெளியானது.
தற்போது அவர் கைவசம், கோப்ரா, ஜாங்கோ படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛சினிமா பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுவதால், அனைத்து மொழிப்படங்களுக்கும் தகுந்த பெண்களையே நாயகியாக நடிக்க வைக்கின்றனர். அதனால், தமிழ் பெண்களை, சினிமாவில் யாரும் புறக்கணிப்பதில்லை. தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் பாலிசி' என நடிகை மிருணாளினி ரவி கூறியுள்ளார்.