ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
டிக்டாக்கில் டப்மாஸ் செய்து புகழ்பெற்றவர் மிருனாளினி ரவி. அதுவே அவருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்தது. கொண்டலகொண்டா கணேஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் சாம்பியன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள எனிமி, எம்.ஜி.ஆர் மகன் படங்கள் தீபாவளிக்கு வெளியானது.
தற்போது அவர் கைவசம், கோப்ரா, ஜாங்கோ படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛சினிமா பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுவதால், அனைத்து மொழிப்படங்களுக்கும் தகுந்த பெண்களையே நாயகியாக நடிக்க வைக்கின்றனர். அதனால், தமிழ் பெண்களை, சினிமாவில் யாரும் புறக்கணிப்பதில்லை. தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் பாலிசி' என நடிகை மிருணாளினி ரவி கூறியுள்ளார்.