தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'அண்ணாத்த', விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி மற்றும் பலர் நடித்த 'எனிமி' ஆகிய இரண்டு படங்களும் தீபாவளியை முன்னிட்டு தமிழ், தெலுங்கில் தென்னிந்தியா முழுவதும் வெளியானது.
தமிழ்நாட்டில் 'அண்ணாத்த' படத்தின் வசூல் கடந்த 4 நாட்களில் 100 கோடியைக் கடந்திருக்கும் என்று கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'எனிமி' வசூலும் எதிர்பார்த்த அளவில் இருப்பதாகவே சொல்கிறார்கள்.
தெலுங்கில் 'அண்ணாத்த' படம் 'பெத்தன்னா' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெளியானது. ஆனால், படத்திற்குப் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றே சொல்கிறார்கள். இதே நிலைதான் 'எனிமி' படத்திற்கும் இருக்கிறதாம்.
முதல் மூன்று நாட்களில் 'அண்ணாத்த' படம் சுமார் 4 கோடியும், 'எனிமி' படம் சுமார் 3 கோடியும் வசூலித்துள்ளதாம். 'அண்ணாத்த' படம் பெரிய அளவில் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அளவில் அந்தப் படத்தின் வசூல் அங்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.