சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
புதுடில்லி : டில்லியில் இரண்டாவது நாளாக நடந்த பத்ம விருதுகள் நிகழ்ச்சியில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.,க்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் சரண் பெற்றுக் கொண்டார்.
பல்வேறு துறைகளில் சாதித்த கலைஞர்களுக்கு இந்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன. கோவிட் பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றும், இன்றும் நடந்தது. டில்லியில் 2வது நாளாக பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (நவ.,9) வழங்கினார். மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர் சார்பில் அவரது மகன் சரண் பெற்றுக் கொண்டார்.
![]() |