துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தெலுங்கு, தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழை விட தெலுங்கில் தான் அதிக ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சமந்தா நடித்த தெலுங்குப் படங்களில் முக்கிய படமான 'ரங்கஸ்தலம்' படத்தை இயக்கிய சுகுமார் அடுத்து அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'புஷ்பா' படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளார் சமந்தா. இயக்குனர் சுகுமார் கேட்டுக் கொண்டதற்காக இப்படி நடனமாட சம்மதித்துள்ளாராளம்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. அல்லு அர்ஜுனுடன் இணைந்து அந்தப் பாடலில் சமந்தா நடிக்கப் போகிறாராம். சமந்தாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது இதுதான் முதல் முறையாம். அதனால், இந்தப் பாடலை மிகவும் ஸ்பெஷலாகப் படமாக்க உள்ளார்களாம்.
இந்த ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தாவுக்கு சம்பளமாக ஒன்றரை கோடி கொடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்தியத் திரையுலகத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒரு நடிகைக்கு இதுவரை வழங்கப்பட்ட சம்பளங்களிலேயே இதுதான் அதிகம் என்கிறார்கள்.