இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்போது விஜய் சேதுபதியுடன் சந்தீப் கிஷனையும் கூட்டணி சேர்த்து மைக்கேல் என்கிற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வில்லனாக மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன். இந்தநிலையில் எனது குருவுடன் இணைந்து நடிப்பதில் சந்தோஷம் என அவருடன் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சந்தீப் கிஷன்.
இதுபற்றி சந்தீப் கிஷன் கூறும்போது, "கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அனேகமாக அவரிடம் மோசமாக பணியாற்றிய உதவி இயக்குனர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். இந்த திரையுலகில் எனக்கென ஒரு அடையாளம் கொடுத்தவர் அவர்தான். அதன்பிறகு தற்போது 15 வருடங்கள் கழித்து அவருடனேயே ஒரு படத்தில் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.