தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தான் இயக்கி, தான் மட்டுமே படம் முழுக்க நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தை தற்போது ஹிந்தியில் அபிஷேக்பச்சனை வைத்து இயக்கி வருகிறார் பார்த்திபன். இந்த நிலையில் அவரது முகநூலை யாரோ விஷமிகள் கடந்த ஞாயிறன்று ஹேக் செய்துள்ளனர். அதில், என் பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம், அறிவு மிகுந்தவன் ரசிகராகலாம். ஆனால் அறிவுக்கே பிறந்த சில ஸ்வீட் எனிமிஸ் ஹேக் செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் செய்ய சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள் என தெரிவித்திருந்தார்.
அதையடுத்து இரண்டு தினங்களுக்கு பிறகு பார்த்திபனின் முகநூல் கணக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதுப்பற்றி, ‛‛முழுச்சிட்டிருக்கும்போதே கண்ணை பிடுங்கி காயிலாங்கடையில் வித்துட்டுப் போயிடுறாங்க பேடு ஹேக்கர்ஸ். ‛‛கெடுத்திடும் புத்தி இருவழி கத்தி. எடுத்தவனையே குத்தி காவு அது வாங்கிடாதோ? இரவின் நிழல்களில் நான் எழுதிய பாடல் வரிகள். திரும்பக் கிடைக்க உதவியவர்களுக்கு நன்றி. இனி இனிதே நட்பு தொடரும்'' என ரெதிவித்துள்ளார் பார்த்திபன்.