ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்று காரணமாக நேற்று காலமானார். நடனம் மட்டும் அல்லாமல் ஒரு நகைச்சுவை நடிகராகவும் இன்றைய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவசங்கர். குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இவரை ரொம்பவே பிடிக்கும்.. அஜித் நடித்த வரலாறு படத்தில் அவரை பரதநாட்டிய கலைஞராக, சற்றே நளினமான பெண் தன்மை கொண்ட ஒரு மனிதராக மிக வித்தியாசமாக காட்டியதில் சிவசங்கரின் பங்கு மிக அதிகம்.. அந்தப்படத்தில் சிவசங்கரின் பங்களிப்பு குறித்து தற்போது நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
“இந்தப்படத்தில் அஜித்தின் மூன்று கதாபாத்திரங்களில் பரதநாட்டிய கலைஞர் கதாபாத்திரத்தை உருவாக்கியபோது இதை நான் சரியாக செய்ய முடியுமா, திரையில் பார்க்கும்போது இது வேறுவிதமாக தெரிந்துவிடாதே என கொஞ்சம் தயங்கினார் அஜித். அப்போது நான் அவரிடம் சிவசங்கர் மாஸ்டரை நம்பி இதை தாரளமாக செய்யலாம் என கூறினேன்.
இந்தப்படத்தின் கதாபாத்திரம் போலவே, பரதநாட்டியத்தின் காரணமாக அவரை அறியாமலேயே அந்த பெண் தன்மை வந்துவிட்டது என்றும் ஆனால் சிவசங்கருக்கும் இரண்டு மகன்கள் உள்ளார்கள் என்றும் கூறினேன். அவர் மீதுள்ள மரியாதை காரணமாகவே அந்தப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு சிவசங்கர் என பெயரும் வைத்தேன்.
இந்தப்படத்தில் அஜித்தின் நடை உடை பாவனைகளை அழகாக வடிவமைத்து கொடுத்தார் சிவசங்கர். அதுமட்டுமல்ல, இந்த அஜித் கதாபாத்திரத்தை வைத்து ஒரு சண்டைக்காட்சியை படமாக்கியபோது, ஒவ்வொரு எதிரியையும் அஜித் அடித்து வீழ்த்தும்போது ஒவ்வொருவிதமான நடன முத்திரையை போஸாக காட்டுவது போல வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதற்கு பொருத்தமாக அந்த சண்டைக்காட்சியில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுத்தார் சிவசங்கர் மாஸ்டர். தியேட்டரில் அந்த சண்டைக்காட்சிக்கு ரசிகர்களின் கைதட்டல் அதிகம் கிடைத்தது” என கூறியுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.