ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மறைந்த எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படம் இருபாகங்களாக உருவாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ,ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வனில் முக்கிய ரோலில் நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவரின் காட்சிகள் சில இன்னும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம். ஏன் தாமதமென்று விசாரித்தால், இரண்டு நாட்கள் முழுமையாக நீருக்குள் படப்பிடிப்பு எடுக்க வேண்டியிருக்கிறதாம். இந்த படப்பிடிப்பிற்கு ஐஸ்வர்யா ராய் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார்.
என்னவென்றால், இரண்டு நாட்கள் நீருக்குள் நடிக்க வேண்டியிருப்பதால், நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருக்க முடியாது. அதனால், நீரினை ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் பராமரிக்க வேண்டும். அதாவது, மிதமான சூட்டுடன் நீர் இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ராயின் நிபந்தனையைச் சாத்தியப்படுத்த வேண்டுமென்பதற்காகப் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகிறதாம். விரைவிலேயே, ஐஸ்வர்யா ராய் கேட்டபடியே படப்பிடிப்பும் நடக்கும் என்கிறார்கள்.