2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

கவனம்பெற்ற குறும்படங்களை இயக்கியவர் தாமோதரன் செல்வகுமார். இவர் இயக்கிய மூடர் என்ற குறும்படம் பல விருதுகளை பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்கி உள்ள திரைப்படம் ஆத்மிகா. ஆனந்த் நாக் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவர் வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் தம்பியாக நடித்திருந்தார். இதுதவிர பிரேமம், நேரம் படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை தொகுப்பாளர் ஐஸ்வர்யா நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ஜீவா ரவி, பிர்லா போஸ் உள்பட பலர் நடித்துள்ளார்கள். கலைசக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண்குமார் இசையமைத்துள்ளார்.
தாமோதரன் செல்வகுமார் கூறியதாவது : படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இளைஞர்கள். பலரும் குறும்படத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். சினிமா மீது தீராத காதல் கொண்டவர்கள். இப்படத்தை ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ளோம். பல பிரச்சினைகளில் பல்வேறு தடைகளுக்கிடையே படத்தை முடித்திருக்கிறோம். படப்பிடிப்பு வாகனங்கள் கூட செல்லாத பல இடங்களில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினோம் என்றார்.