தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கண்ணை நம்பாதே. இப்படத்தை மு.மாறன் இயக்கி இருக்கிறார். வருகிற 17ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து ஆத்மிகா கூறுகையில், கண்ணை நம்பாதே படம் எனது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதுவரை நான் நடிக்காத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாகி விடுவேன். இந்த படம் எனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக அமையப் போகிறது. இந்த கதையை இயக்குனர் சொன்னபோது கதையோடு முழுமையாக ஒன்றி விட்டேன். அந்த அளவுக்கு ஒரு உணர்வுபூர்வமான கதையாக இருந்தது. கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் உடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தது. அவர் நிறைய சவால்களுக்கு மத்தியில் இந்த படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அவரது கதாபாத்திரமும் பேசப்படும் என்கிறார் ஆத்மிகா.