துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கண்ணை நம்பாதே. இப்படத்தை மு.மாறன் இயக்கி இருக்கிறார். வருகிற 17ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து ஆத்மிகா கூறுகையில், கண்ணை நம்பாதே படம் எனது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதுவரை நான் நடிக்காத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாகி விடுவேன். இந்த படம் எனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக அமையப் போகிறது. இந்த கதையை இயக்குனர் சொன்னபோது கதையோடு முழுமையாக ஒன்றி விட்டேன். அந்த அளவுக்கு ஒரு உணர்வுபூர்வமான கதையாக இருந்தது. கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் உடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தது. அவர் நிறைய சவால்களுக்கு மத்தியில் இந்த படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அவரது கதாபாத்திரமும் பேசப்படும் என்கிறார் ஆத்மிகா.